விருது வெல்லும் வாழ்க்கை!

B. A. Manakala

அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய்ப் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான். சங். 58:11.

ஆலயத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான போட்டிக்குப் பிறகு, ஒரு பெற்றோர், "என் மகள் மிகவும் நன்றாகப் பாடினாள். அவளுக்குத் தான் இந்த போட்டியிலே முதல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்" என்று சொல்லக் கேட்டேன். 

உண்மையிலேயே தேவனுக்காய் வாழ்கிறவர்களுக்கு வெகுமதி உண்டு (சங். 58:11). ஆனாலும், யாருக்கு வெகுமதி வழங்கப்பட வேண்டும் என்பதையும், அந்த வெகுமதி என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், அதைக் கொடுப்பவர் மட்டுமே தீர்மானிக்க முடியும். அந்த வெகுமதியைப் பெற, ஒருவரும் தேவனிடம் செல்வாக்கு செலுத்த முடியாது. ஆனால், நீங்கள் ஒரு காரியம் செய்யலாம்: "எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். நீங்கள் சேவிக்கிற எஜமான் கிறிஸ்து என்பதையும், கர்த்தரே உங்களுக்கு சுதந்தரமாகிய பலனைத் தருவார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்" (கொலோ. 3:23-24).

மனிதரைப் பிரியப்படுத்துகிறதற்காகவும், வெகுமதிக்காகவும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 

மனிதர்களிடம் செல்வாக்கு செலுத்தி, பூமியிலே பல விருதுகளை நாம் வெல்லலாம். ஆனால்,  பரலோகத்திலுள்ள விருதை வெல்ல, நம் செல்வாக்கு தேவனிடம் செல்லுபடி ஆகாது! 

ஜெபம்: கர்த்தாவே, நான் ஒரு விருதை வெல்கிறேனோ இல்லையோ, உமக்கும் பிறருக்கும் உண்மையாய் சேவை செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்!

Comments

Popular posts from this blog

How long will he forgive?

Slippery sliding cliff!

Who is truly wise?